விழாக்கள், கொண்டாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை
விழாக்கள், கொண்டாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாது திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள், கொண்டாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார வழிகாட்டல்கள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையிலும் சிலர் நாள் தோறும் பல்வேறு நிகழ்வுகளை நடாத்த அனுமதி கோரி பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் ஆவணங்களை சமர்ப்பித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் கோவிட் பெருந்தொற்று நிலைமை நீங்கிவிடவில்லை எனவும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு