விழாக்கள், கொண்டாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை
விழாக்கள், கொண்டாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாது திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள், கொண்டாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார வழிகாட்டல்கள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையிலும் சிலர் நாள் தோறும் பல்வேறு நிகழ்வுகளை நடாத்த அனுமதி கோரி பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் ஆவணங்களை சமர்ப்பித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் கோவிட் பெருந்தொற்று நிலைமை நீங்கிவிடவில்லை எனவும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan