சட்டத்துக்கு புறம்பாக பதுளை பெருந்தோட்டப்புறங்களில் மதுபான விற்பனையகங்களா? வடிவேல் சுரேஸ் கேள்வி
பெருந்தோட்டப்புறங்களை மையப்படுத்தி மதுபான விற்பனையகங்கள் சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்படவில்லை என்று நிதி ராஜாங்க அமைச்சா் செஹான் சேமசிங்க(Sehan Semasinghe) தொிவித்துள்ளாா்.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் வடிவேல் சுரேஸ்(Vadivel Suresh) இன்று நாடாளுமன்றத்தில் தொடுத்த கேள்விகளின்போதே செஹான் சேமசிங்க இந்த பதிலை வழங்கினாா்.
பதுளை மற்றும் ஹப்புத்தளை பகுதிகளில் பெருந்தோட்டப் புறங்களை மையப்படுத்தி மதுபான விற்பனையகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மஹியங்களை பிரதேசம் பாாிய பிரதேசமாக இருக்கின்றபோதும் அங்கு 9 மதுபான விற்பனையகங்கள் மாத்திரமே உள்ளன.
எனினும் பசறை, ஹப்புத்தளை, பதுளை, போன்ற இடங்களில் குறிப்பாக கிக்கட்டிகல, அம்பிட்டிக்கந்த மற்றும் பூனாகல போன்ற தோட்டங்களுக்கு அருகிலும் ஹொப்டன் தோட்டத்திலும் மதுபான விற்பனையகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இது பெருந்தோட்டத்துறையை இலக்குவைத்து மேற்கொள்ளப்படுகிறதா? என்று வடிவேல் சுரேஸ் கேள்வி எழுப்பினாா்.
மதுபான விற்பனையகங்கள், பெருந்தோட்டப்புறங்களில் அமைக்கப்படுவதால், பெருந்தோட்ட இளைஞர்கள் மதுபான பாவனைக்கு உந்தப்படுகின்றனா்.
இதனால் கலாசார சீர்கேடுகளும் ஏற்படுகின்றன என்று வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டாா்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri