40 பேரை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் சாரதி ஒருவர் கைது! வெளியான அதிர்ச்சி தகவல்
கொழும்பு – குருணாகல் மார்க்கத்தில் அலவ்வ பிரதேசத்தின் தொடருந்து பாதையின் குறுக்கே நேற்று(13.06.2023) காலை பேருந்து ஒன்று பாதுகாப்பற்ற முறையில் பணித்தமையால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பேருந்து, தொடருந்தால் மோதப்படும் விபத்திலிருந்து தப்பியதாக பொல்கஹவெல போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
கல்னேவவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த பேருந்தில் 40 பேர் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து குறித்த பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடருந்து கடவையின் ஊடாக பேருந்தை கவனக்குறைவாக செலுத்தி கொலைகளுக்கு முயற்சி செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
