ஷானி அபேசேகரவிற்கு இயற்கை மரணத்தை ஏற்படுத்த முயற்சி: சஜித் குற்றச்சாட்டு
குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு இயற்கை மரணத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
திட்டமிட்ட அடிப்படையில் ஷானி இயற்கையாகவே மரணிக்கச் செய்ய முயற்சிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஷானி அபேசேகரவின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஷானி விவகாரத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கோழைத்தனமானவை எனவும், வெட்கப்பட வேண்டியவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திட்டமிட்ட அடிப்படையில் இயற்கையாகவே மரணிக்கச் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ரணில் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, ஷானி அபேசேகரவை பழிவாங்குவதாகவும், இயற்கையாக மரணிக்கச் செய்ய சூழ்ச்சி செய்வதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam

அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ Cineulagam
