வவுனியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : பொலிஸார் விசாரணை (PHOTOS)
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்து இன்று (04) மதியம் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதி வழியாக சென்ற கார் ஒன்று ராணி மில் வீதியில் திரும்பிய போது பின்னால் வந்த பாரவூர்த்தி குறித்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான கார் அப் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் நின்ற மோட்டர் சைக்கிளுடன் மோதியுள்ளது.
அத்துடன் கார் அருகில் இருந்த வர்த்தக நிலையத்திற்குள் புகுந்ததால் வர்த்தக நிலையத்தின் முன் பகுதியும் இடிந்து விழுந்து அதன் கூரைப் பகுதியும் சேதமைடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் கார் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பன சேதமடைந்துள்ளதுடன், விபத்துக்குள்ளான வாகனங்களை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் News Lankasri

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan
