நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் பேருந்துடன் லொறி மோதி விபத்து (Photos)
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்றுடன் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்துச் சம்பவம் இன்று (9) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துடன், கந்தளாய் பிரதேச சபைக்குச் சொந்தமான லொறி ஒன்றே இவ்வாறு பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும்,லொறியின் சாரதிக்கு வாய் உடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். லொறியின் சாரதி நித்திரை காரணமாக சென்று மோதியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில், பயணிகளுக்கு பிறிதொரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri
