திருகோணமலை கிண்ணியாவில் விபத்து : பொலிஸார் விசாரணை
திருகோணமலை கிண்ணியா வில்வெளி பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (27) இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிண்ணியாவில் இருந்து சுரங்கல் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி நாய் ஒன்றுடன் மோதியதில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே பலத்த காயங்களுடன் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விபத்துகுள்ளான நபர் கிண்ணியா இடிமண் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எப்.பாரூக் என்பவராவார்.
மேலும் விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்து செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது


அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam