நாட்டில் இடம்பெற்ற இரு வெவ்வேறு விபத்து சம்பவங்கள் (Photos)
தம்புள்ளை
தம்புள்ளை - ஹெக்கராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக வந்த முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டினை இழந்ததனால் தடம்புரண்டு விபத்து நேர்ந்துள்ளது.
இவ் விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் - மூளாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து இன்று இரவு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் விற்பனை நிலையம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றும் காரைநகர் கருங்காலியை சேர்ந்த சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா (வயது49) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவனான மூளாயைச் சேர்ந்த ஆனந்தகுமார் கஜீபன் என்ற இளைஞரே காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூளாய் - மாவடி வீதியில், காளி கோயிலுக்கு சமீபமாக இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் இவ் விபத்து சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri
