வவுனியா பிரதான வீதியில் விபத்து: இருவர் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா பிரதான வீதி நவகம பிரதேசத்தில் முச்சக்கர வண்டியுடன் வான் மோதி இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்து இன்று (14.08.2024)காலை இடம்பெற்றுள்ளதாக வவுனியா, இரட்டைபெரியகுளம் பொலிஸார் கூறியுள்ளனர்.
அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த வான் ஒன்றுடன் வவுனியாவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
முச்சக்கர வண்டியுடன் வான் மோதியதில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரட்டைபெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
