வெளிநாடு செல்ல காத்திருந்த இளம் தந்தைக்கு நேர்ந்த துயரம்
கேகாலை - யட்டியந்தோட்டை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேகாலையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவிசாவளையிலிருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்து கரவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொட்டியகும்புர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெளிநாடு செல்வதற்கு தேவையான ஆவணங்களை தயாரிக்க சென்றபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் குறித்து ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri