வெளிநாடு செல்ல காத்திருந்த இளம் தந்தைக்கு நேர்ந்த துயரம்
கேகாலை - யட்டியந்தோட்டை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேகாலையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவிசாவளையிலிருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்து கரவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொட்டியகும்புர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெளிநாடு செல்வதற்கு தேவையான ஆவணங்களை தயாரிக்க சென்றபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் குறித்து ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam