திருகோணமலையில் கோர விபத்து: ஒருவர் பலி
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் வைத்து கார் - ரிப்பர் வாகனங்கள் நேருக்குநேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (08) காலை இடம்பெற்றுள்ளது.
காரில் பயணித்தவர்கள் தோப்பூரிலிந்து மன்னாருக்கு வேலை நிமிர்த்தமாக சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த ரிப்பர் வாகனத்துடன் நேருக்குநேர் மோதியதாலே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதன்போது, காரில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்தவர் ஆவார். ரிப்பர் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
இந்நிலையில், உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



