யாழ். திருநெல்வேலியில் கோர விபத்து: ஒருவர் பலி(Photos)
திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் படுகாயமடைந்தனர் என அப்பகுதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்,
பலாலி வீதி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை 12 மணியளவில் மோட்டார் சைக்கிளை திருநெல்வேலிப் பகுதியில் இருந்து வந்த மகேந்திரா வாகனம் மோதித் தள்ளியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்த அதேநேரம் மேலும் ஒருவர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மகேந்திராவில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த விமலச்சந்திரன் நிதுசன் (வயது 28) என்பவரே
உயிரிழந்துள்ளார். புத்தூரை சேர்ந்த வி.தனுஜன் (வயது 25), யாழ்ப்பாணத்தைச்
சேர்ந்த உலகநாதன் கிரிசங்கர் (வயது 24) கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த க.
சியாந்தன் (வயது 26) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய
சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த விபத்து தொடர்பில் விசாரணையை மேற்கொண்டுவரும் கோப்பாய் பொலிசார்
விபத்துடன் தொடர்புபட்ட வாகனங்களை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.




விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri
