தந்தையை பார்க்க சென்ற மகன் விபத்தில் பலி
தென்னிலங்கையில் தந்தையை பார்க்க சென்ற மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றும் 54 வயதான வஜிர பிரியன் என்ற குடுபஸ்தரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பின் புறநகர் பகுதியான பாதுக்க பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் விபத்து
மோட்டார் சைக்கிள் விபத்து காரணமாக நேற்று பிற்பகல் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரி, விடுமுறையில் தந்தையை பார்ப்பதற்காக வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிசிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
