யாழில் தென்னங்கோம்பைகளை ஏற்றி வந்த பட்டா ரக வாகனம் விபத்து
யாழில் தென்னங்கோம்பைகளை ஏற்றி வந்த "பட்டா ரக வாகனம்" ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து, யாழ். சாவகச்சேரி நுணாவில் ஏ9 வீதியில் இன்று (22.02.2024) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரியிலிருந்து தென்னங்கோம்பைகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணைகள்
மேலும், இந்த விபத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |