முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள் என்பன நேருக்கு மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் கம்பஹா மாவட்டத்தின், மீகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த வெலிவேரிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த இரு பெண்கள் ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார்சைக்கிள் செலுத்துநரை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.