கொழும்பிலிருந்து சென்ற பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு! காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்
கொழும்பு - மொரட்டுவவிலிருந்து பாணந்துறை நோக்கிச்சென்று கொண்டிருந்த பேருந்தொன்று வீதியிலிருந்து விலகி வீடொன்றின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வீதியிலிருந்து விலகி, அருகிலிருந்த வீட்டின் மீது மோதியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் போக்குவரத்துப்பிரிவு விசாரணை
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், ஆனால் வீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்கள் பாணந்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து மொரட்டுவ பொலிஸ் போக்குவரத்துப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri