திருகோணமலையில் பசு மீது மோதிய மோட்டார்சைக்கிள் - இளைஞர் வைத்தியசாலையில்
திருகோணமலை உட்துறைமுக வீதியில் நேற்று (22) இரவு சுமார் 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவருக்குக் கால் முறிவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் மோதிய பசு உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான குற்றச்சாட்டு
இந்த விபத்துக்கு முழுப் பொறுப்பும் திருகோணமலை மாநகரசபையின் தொடர்ச்சியான கவனயீனமே எனப் பொதுமக்கள் மத்தியில் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறித்த உட்துறைமுக வீதியில் மாலையளவில் பல மாடுகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி நடமாடித் திரிவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் சட்டத்தரணிகளின் கருத்துப்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாநகர சபைக்கு எதிராக வழக்குத் தொடரக்கூடிய வாய்ப்பு சட்டத்தில் உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து மாநகர சபை தவறியமையே இந்த விபத்துக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
பொதுமக்கள் கோரிக்கை
திருகோணமலை நகர் பகுதியில் மாடுகளின் நடமாட்டம் என்பது நீண்டகாலமாகத் தொடரும் ஒரு பிரச்சினையாகும். இனியும் மாநகர சபை உரிய நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பின்றிச் செயற்படுமானால், இது போன்ற விபத்துக்களாலும் அதனால் ஏற்படும் உயிர்ப்பலிகளாலும் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க முடியாது. எனவே இது குறித்து மாநகர சபை விரைவில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri