அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பலி!
அம்பாறை, பன்னல்கம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிவேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்த இருவருக்கும் வயது 48 என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அண்மைய நாட்களாக இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு சுமார் ஏழு முதல் எட்டுபேர் வரையில் உயிரிழப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.