காலிஸ்தான் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட கனேடிய பொலிஸ் அதிகாரி
சார்ஜென்ட் ஹரிந்தர் சோஹி (Harinder Sohi) என்ற கனடாவின் பொலிஸ் அதிகாரி, அண்மையில் பிராம்டனில் இந்துக்கோயில் தாக்கப்பட்டபோது, காலிஸ்தான் கொடியை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் பங்கேற்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் சட்டத்தின்படி இடைநீக்கம்
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்தியாவுக்கு எதிரான கோசங்களை எழுப்பிய நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி, சாதாரண உடையில், காலிஸ்தானிய கொடியை கையில் ஏந்தி அந்த போராட்டத்தில் பங்கேற்றமையை காணொளிகள் நிரூபித்துள்ளன.
ஹரிந்தர் சோஹி, 18 வருடங்களாக கனேடிய பொலிஸில் சேவையாற்றி வருகிறார்.
இந்தநிலையில், கடமை தவறிய இந்த அதிகாரி, போராட்டத்தில் கலந்து கொண்டதை, பீல் பொலிஸ் துறையின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் சின் உறுதிசெய்துள்ளார்.
இதனையடுத்து அவர் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சட்டத்தின்படி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
