வடபகுதியில் சுமார் 33,670 வெடிபொருட்கள் ஸார்ப் நிறுவனத்தால் மீட்பு (Photos)
முல்லைத்தீவு அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் சுதந்திரபுரம் ஆகிய பகுதிகளில் இருபது இலட்சத்து எண்பத்திரெண்டாயிரத்து நூற்றுபத்து சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து முப்பத்திமூவாயிரத்து அறுநூற்று எழுபது அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தால் இன்று(22) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனம்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2022 மே மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும் , புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் இருபது இலட்சத்து எண்பத்திரெண்டாயிரத்து நூற்றுபத்து சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து முப்பத்திமூவாயிரத்து அறுநூற்று எழுபது அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச
செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும் அம்பகாமம்; பகுதியிலும்;
துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது மேலும் கடந்த
வெள்ளிக்கிழமை(20) பச்சிளைப்பளை பிரதேச வைதிதியசாலையில்
சிரமதானபணியும் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது.