வட் வரி விலக்குகளை நீக்குமாறு நாடாளுமன்றில் முன்மொழிவு
நூல்கள்,இதழ்கள், நூலகச் சேவைகள் முதல் நகைகள், தொலைபேசிகள் மற்றும் இயந்திரங்கள் என அனைத்திற்கும் அடுத்த ஆண்டு ஆரம்பம் முதல் வரிக்கு உட்படவுள்ளன.
இந்நிலையில், வட் வரி விலக்குகளை நீக்குமாறு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளது.
இந்த நிலையில் அதற்கு ஒப்புதல் கிடைத்ததும், நூல்கள் மற்றும் இதழ்கள் முதல் பழ விதைகள், முத்துக்கள், வைரங்கள் மற்றும் பொது நூலக சேவைகள் அனைத்துக்கும்,அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வரும் வகையில், 18 சதவீத புதிய விகிதத்தில் வரி விதிக்கப்படும் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை
மேலும், கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள் மற்றும் கணினி பாகங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
அத்துடன், கட்டுமானம், அரிசி அரைத்தல் மற்றும் பால் பதப்படுத்தும் இயந்திரங்கள், தொழில்களில் பயன்படுத்த உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்; முச்கக்கர வண்டிகளின் மானிகள், விவசாய இயந்திரங்கள் மற்றும் பாகங்கள்; கோழித் தொழிலுக்கான பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள், ஆற்றல் சேமிப்பு மின் விளக்குகள், குறித்த தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் என்பனவும் இந்த வரி விதிப்புக்குள் அடங்கும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது 2024 வரவு செலவுத் திட்ட உரையில், ஜனவரி 2024 இல் வட் வரி விகிதம் 18 சதவீதமாக உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார்.
மேலும், 'சுகாதாரம், கல்வி மற்றும் சில அத்தியாவசிய உணவுகள் தொடர்பான பொருட்கள் தவிர மற்ற அனைத்து பொருட்களுக்குள் வரி விலக்குகளும் நீக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்த வரி விதிப்புக்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.