உள்நாட்டு நிறுவனங்களுக்கான முன்னுரிமை சலுகை ரத்து
அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னைய அரச நிர்வாகம் வழங்கிய முன்னுரிமை சலுகையை நிதி அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
அரச துறைக்கான பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் போது வழங்கப்பட்டு வந்த சலுகையே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது சில சந்தை தோல்விகளுக்கு வழிவகுத்தது என்ற அடிப்படையில் குறித்த சலுகைகளை அமைச்சகம் ரத்துச்செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சிறப்பு முன்னுரிமை
முன்னைய கோட்டாபய ராஜபக்ச நிர்வாகம், உள்நாட்டு தொழில்களுக்கு ஆதரவளிப்பதற்கு, போட்டி ஏல நடைமுறையின் கீழ் ஏலங்களை சமர்ப்பிக்கும் போது பொது நிறுவனங்களுக்கு சிறப்பு முன்னுரிமையை வழங்குவதற்காக 2020இல் சுற்றறிக்கைகளை வெளியிட்டது.

ஒரு தனி சுற்றறிக்கை, உள்நாட்டு மென்பொருள் மற்றும் வன்பொருள், கட்டுமானம், தளபாடங்கள், அதனுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் தொழில்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்தது.
எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் வரும் நிதியமைச்சகம், இந்த சுற்றறிக்கைகளை இரத்து செய்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நீர்கொழும்பு சிறையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் பதற்றம் - அவசர விசாரணைக்காக விரையும் முக்கிய அதிகாரிகள்
நீர்கொழும்பு சிறை மோதல்: கைதிகளால் அடித்து நொருக்கப்பட்ட CCTV கமராக்கள் - தீவிரமடையும் சிஐடி விசாரணை
தமிழருக்கு சொந்தமான பாரிய பீச் ஹோட்டல் எரியூட்டப்பட்ட கொடூரம்! மைக்கேல் ராபர்ட்ஸ் என்பவரால் வெளியிட்டுள்ள தகவல்கள்
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri