ஆண்டாங்குளம் கருவாடு
இலங்கை கரையோரப் பகுதி மக்களின் பிரதான ஜீவனோபாய தொழிலாக இருப்பது மீன்பிடித்தல்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இயற்கையின் சீற்றங்களுக்கு மத்தியிலும் இந்த பகுதிகளில் உள்ள மக்கள் தமது அன்றாட தொழிலை முன்னெடுத்துச் செல்வதுடன் பல இழப்புக்களையும் சந்தித்து வருகின்றனர்.
தமது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள அயராது உழைக்கும் மக்கள் மீன்பிடியோடு தொடர்புடைய இதர சில பணிகளையும் செய்து வருமானம் ஈட்டுவர்.
அந்த வகையில் வாகரை பிரதேசத்திற்கு உட்பட் ஆண்டாங்குளம் கிராமத்தில் முன்னெடுக்கப்படும் கருவாடு உற்பத்தி தொடர்பில் ஆராய்கிறது இந்த விசேட காணொளி,