வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு(Photos)
வவுனியாவில் மின்சாரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இந்த சம்பவமானது, வவுனியா - கூமாங்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா - கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய செல்வராசா கேதீஸ்வரன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வவுனியா - கூமாங்குளம் பகுதியில் உள்ள தோட்டக் காணி ஒன்றில் வெங்காயத்திற்கு
ஒருவர் நீர் இறைத்துக் கொண்டிருந்த போது, மற்றொருவர் மின்சார வயரின் உதவியுடன்
வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, மின்சார வயரில் இருந்து மின் தாக்கியதில் குறித்த இளைஞன் பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டடார். எனினும் அவர் மின்சாரம் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.











Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan
