கோவிட் தொற்றுடன் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞன்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தனிமைப்படுத்தல் சட்டமுறைகளை மீறி கோவிட் தொற்றுடன் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞரை அங்கு தனிமைப்படுத்துமாறும், எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கோவில்குளம், 5ஆம் ஒழுங்கையில் வசிக்கும் வயதான பெண் ஒருவருக்கும், இளைஞன் ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த வயதான பெண்ணுக்கு நோய் தாக்கம் அதிகரித்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது செவ்வாய்கிழமை சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருந்தார்.
இவரின் மரணத்தையடுத்து உடலத்தை தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த சுகாதாரப் பிரிவினர், தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்ற போது அங்கு தொற்றுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளைஞனை காணவில்லை.
இதனையடுத்து அங்கு இருந்த உறவினர்களிடம் விசாரித்த போது அவர் யாழ்ப்பாணம் சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறையை மீறி கோவிட் தொற்றுடன் யாழ்ப்பாணம் சென்ற இளைஞனுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிசார் ஊடாக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
வழக்கினை விசாரித்த வவுனியா நீதிமன்றம் குறித்த இளைஞனை தற்போது அவர் நிற்கும் இடத்தில் தனிமைப்படுத்துமாறும், எதிர்வரும் 24 ஆம் திகதி மன்றில் முற்படுத்துமாறும் கட்டளை பிறப்பித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri