யாழில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் இளைஞன் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்
யாழில் வன்முறை கும்பல் ஒன்றினால் இளைஞன் ஒருவர் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம், நேற்று (31.12.2024) இடம்பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டின் இறுதிநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்று வந்த நிலையிலேயே நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்பாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது, அந்த கும்பலை சேர்ந்த தரப்பினர் முச்சக்கர வண்டியின் ஒரு சில்லினை தூக்கி ஆபத்தான முறையில் வீதியின் குறுக்கு மறுக்காக வாகனத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின்னர் குறித்த கும்பலால் வீதியில் நின்ற இளைஞன் ஒருவர் மீது, தலைக்கவசம், கையில் உள்ள பொருட்கள் என்பவற்றை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
