கிளிநொச்சியில் விபத்து! இளம் குடும்பஸ்தர் பலி
கிளிநொச்சி இருந்து தருமபுரம் நோக்கி நேற்று(29.05.2023) மாலை பயணித்த மோட்டார் சைக்கிளும் புது
குடியிருப்பு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப்ரக (
பட்டா) வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பொழுது அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தியாகராசா சஞ்சீவன் 36 வயதுடைய தருமபுரம் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிழந்துள்ளார்.
விபத்துக்கான காரணம்
காயமடைந்தவர் மேலும் ஒருவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதிக மது போதையில் பயணித்ததாலே இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

டாக்டராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா செய்து தற்போது செய்யும் வேலை? News Lankasri

மகனின் திருமண வரவேற்பில் எடப்பாடிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.., எஸ்.பி வேலுமணி போடும் திட்டம் News Lankasri

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர், கொஞ்ச நாள் தான் இருப்பேன்.. விஜய்க்கு வைத்த கோரிக்கை Cineulagam
