யாழில் போதை மருந்து வில்லைகளுடன் பெண்ணொருவர் கைது(Photo)
யாழ்ப்பாணத்தில் போதை மருந்து வில்லைகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் இருந்து கைக்குழந்தையுடன் புல்மோட்டை பகுதிக்கு வந்த நிலையில் 777 போதை மருந்து வில்லைகளுடனும், 60 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் இருந்து புல்மோட்டை பகுதிக்கு போதை பொருட்களை பேருந்தில் கொண்டு சென்றுள்ளார்.
இதன்போது வழியில் தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து போருந்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகள்

கைது செய்யப்பட்ட பெண் கொக்குளாய் பகுதியைச் சேர்ந்தவர்.
கைது செய்யப்பட்ட
பெண்ணிடம் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்
சதுரங்க தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 13 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam