மஹியங்கனையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு
மஹியங்கனை, சேரனாகம பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (29) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இலக்கம் 99, திக்கொட, சேரனாகம பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய பெண்ணே இவ்வாறு காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த பெண் இன்று(29) காலை ஆறு மணியளவில் தனது வீட்டிற்கு அருகில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மஹியங்கனை பிரதான வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
[CU6ALEB ]





ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

அந்த பிரச்சனையால் 15 ஆண்டுகள் காத்திருந்து அவரை திருமணம் செய்தேன்... கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக் Cineulagam

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam
