உலக சந்தையில் எண்ணெய் விலையில் சடுதியான அதிகரிப்பு
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.
செங்கடலில் ஹவுதி (Houthi) கிளர்ச்சியாளர்களுக்கும், அமெரிக்க போர்க் கப்பல்களுக்கும் இடையிலான மோதல் காரணமாக இவ்வாறு மசகு எண்ணெய்யின் விலை உயர்வடைந்துள்ளது.
சடுதியான விலை உயர்வு
யேமனை மையமாகக் கொண்டு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக, செங்கடலில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்குவைத்து ஹவுத்தி (Houthi) கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஆசியாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் இடையிலான பரபரப்பான சர்வதேச கடல் வர்த்தகப் பாதையாகக் கருதப்படும் செங்கடலில் மோதல் ஆரம்பிப்பதால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் நெருக்கடி ஏற்படும் அபாயமுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri