12 இலட்சம் வருமானம் பெறும் இலங்கையர்கள் : நிதி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

Benat
in பொருளாதாரம்Report this article
12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், தேவையான தீர்வுகளை எங்களால் மேற்கொள்ள முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வறுமையைப் பார்க்காதீர்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஒரு நாடாக நாம் மிகவும் கடினமான முடிவுகளை எடுத்துள்ளோம். இன்று நாடு ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. சந்தர்ப்பவாத, அரசியல் கோணத்தில் இருந்து பார்க்காமல் சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள முடியும்.
மக்களுக்கு சிரமம் உள்ளது. அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் அதை நிராகரிக்கவில்லை. வீழ்ச்சியுற்ற நாட்டை ஒரேயடியாக மீட்க முடியாது. சிரமங்களிலிருந்து விடுபட, முதலில் ஒரு திட்டம் தேவை.
குறுகிய கால சிரமங்கள் இருக்கும். அந்த அசௌகரியங்களைத் தவிர்க்க சமூக நலத்திட்டங்களை வழங்கியுள்ளோம். செழிப்பைப் பார்க்கும் அதே கண்களால் வறுமையைப் பார்க்காதீர்கள்.
வரி அதிகம் என்று கூச்சல் போடுவதில் அர்த்தம் இல்லை..
வரி செலுத்த வேண்டிய மக்களை வரி செலுத்த ஊக்குவிக்க வேண்டும். 12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், தேவையான தீர்வுகளை எங்களால் மேற்கொள்ள முடியாது.
அவர்கள் கடனைச் செலுத்த வேண்டும். மற்றபடி குறைந்த வரி செலுத்தியோ, வரி கட்டாமல் இருந்தோ வரி அதிகம் என்று கூச்சல் போடுவதில் அர்த்தமில்லை.
பொருளாதார நெருக்கடியால், இந்த நிலையைப் புரிந்துகொள்வது பலருக்கு கடினமாக உள்ளது. நாட்டை மீட்டெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 50 நிமிடங்கள் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri
