மன்னாரில் விநோதமான முறையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம்..!
மன்னார் (Mannar) நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் விநோதமான முறையில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிறுவன் ஒருவருடன் பெண் ஒருவர் அங்குள்ள வீடு ஒன்றுக்குச் சென்று சாத்திரம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (25) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கோவிலுக்கு நிதி சேகரிப்பு
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் பணத்தை கொடுக்க குறித்த இருவரும் குடிக்க நீர் கேட்டுள்ளனர்.

அவர்கள் குடிக்க நீர் கொடுத்த வேளையில், தான் சாத்திரம் பார்ப்பதாகக் கூறி பலவந்தப்படுத்தி வீட்டில் இருந்த இருவருக்கு சாத்திரம் பார்த்துள்ளார்.
சிசிரிவி வீடியோ காட்சி
இதன்போது வீட்டில் இருந்த இருவருக்கும் சுய நினைவை இழக்கச் செய்யும் வகையில் மருந்து பூசிய நிலையில், அந்த பெண் அணிந்திருந்த சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக் கொடியை அபகரித்துச் சென்றுள்ளார்.
மாலை 5 மணிக்கு பின்னர் அவர்களுக்கு சுய நினைவு திரும்பிய நிலையில் குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை சந்தேகிக்கப்படும் குறித்த பெண் சிறுவன் ஒருவருடன் குறித்த பகுதியில் வீதியால் சென்ற சிசிரிவி வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri