இலங்கையில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார ஆலோசனைகளை முறையாக பின்பற்றுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன ஆகியோர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும் விதிமுறைகளை மீறி செயற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்றாவிடின் மிகுந்த சவாலுக்கு மத்தியில் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காமல் போய்விடும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,