அவுஸ்திரேலியா செல்ல தயாரான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட சிக்கல்
அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த விமானத்தின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கு இன்று புறப்படவிருந்த விமானத்தை இரத்து செய்ய நேரிட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத் தொடர்பாடல் திணைக்களத்தின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப கோளாறு
அதற்கமைய, அவசர தேவையின் அடிப்படையில் பயணிகளை மாற்று விமானங்களில் அனுப்ப ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏனைய பயணிகள் நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படவுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam