கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளியை மோதிவிட்டு தப்பிச் சென்ற பட்டாரக வாகனம்
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் இன்று(20) முற்பகல் 11.00 மணியளவில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இயக்கச்சி பகுதியில் இருந்து இயக்கச்சி சந்திநோக்கி பயணித்த மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியை கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் பின்னால் வந்து மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த இயக்கச்சி பகுதியை சேர்ந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் இடத்திற்கு வருகை தந்த பளை போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற வாகனத்தை அருகில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் காண முயற்சித்துவருகின்றனர்.
விரைவில் அவிழும் ஈஸ்டர் தாக்குதலின் மர்மங்கள்! சுரே சாலே தரப்பின் பொய்களுக்கு எதிரான ஆதாரங்கள் நீதிமன்றில்
மோசமடையும் வானிலை தொடர்பில் விழிப்புடன் இருக்கவும்..! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை