பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட குப்பைகளை அப்பகுதியில் போட வேண்டாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை நேற்று(10) வெளியிட்ட அறிக்கையில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
யாத்திரை
அதன்படி, சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வருகை தரும் போது ஏதேனும் குப்பை சேருமெனில், அந்த குப்பைகளை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை சிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்லும் முக்கிய நுழைவாயில்களில் அதாவது நல்லத்தண்ணி பாதை மற்றும் இரத்தினபுரி வழியாக வரும் இரண்டு பாதைகளில் உள்ளூராட்சி அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சிவனொளிபாத மலை யாத்திரை காலத்தில் நடத்தும் குப்பை சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்குமாறு அனைத்து பக்தர்களிடமும் அந்த சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
