விபத்துக்குள்ளான, அமெரிக்காவி்ன் அதிநவீன போர் விமானம்! தீவிரமாக தேடும் சீனா!
அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி கப்பல் -யூஎஸ்எஸ் கார்ல் வின்சனில் இருந்து புறப்பட்ட அதிநவீன போர் விமானத்தை தேடும் பணியில் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்-35 என்ற இந்த விமானம், கடந்த திங்கட்கிழமை தென் சீனக் கடலில் வீழ்ந்தது..
இது தொடர்பில் புதிய படங்களும் காணொளிகளும் இணையத்தில் பரவி வருகின்றன.
விபத்துக்குள்ளான இந்த விமானத்தின் மதிப்பு 10 கோடி அமெரிக்க டொலராகும்.
இலங்கையின் மதிப்பில் 2500 கோடி ரூபாவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் வெளியாகியுள்ள காணொளியில் ஜெட் வேகமாக கப்பலை நெருங்கி வருவதைக் காட்டுகிறது,
இதனையடுத்து அங்கு திடீரென புகை தோன்றுகிறது. இந்தநிலையில் கடலில் விழுந்த அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர் விமானத்தை, சீனாவின் கடற்படை மீட்பதற்கு முன், தாம் மீட்டுவிடவேண்டும் என்று அமெரிக்கா தேடிக்கொண்டிருக்கிறது.
இந்த போர் விமானம், பல்வேறு அதி நவீன ரகசிய சாதனங்களைக் கொண்டது. அத்துடன் வீழந்த இடம் சர்வதேச எல்லைக்குள் வருவதால் பலநாடுகளும் அதைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்தப் போட்டிக்கான காரணம். அந்த விமானத்தின் புதிய தொழில்நுட்பங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போர் விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே, தன்னிடமுள்ள தரவுகளைப் பகிரும் வலையமைப்பைக் கொண்டது.
தாழ்வாகப் பறந்து கண்காணிக்கும் திறன் கொண்ட, விமானம். அத்துடன் தாங்கிக் கப்பலில் இருந்தே புறப்பட்டு அதிலேயே தரையிறங்கும் திறன் கொண்ட அமெரிக்க கடற்படையின் முதல் விமானமாகும்.
இந்த விமானம் மணிக்கு 1,200 மைல் வேகத்தில் பறக்கக்கூடியது.
அதேநேரம் வெளியே இரு ஏவுகணைகள், உள்ளே நான்கு ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.