யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் யாழ். நகர்ப் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று(15.09.2023) கைது செய்யப்பட்டுள்ளார்
பொலிஸ் விசாரணை
அத்துடன் அந்த நபரிடம் இருந்து ஒரு கிலோ 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ள நிலையில் சந்தேக நபரை இன்றையதினம்(16.09.2023) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
