கண்ணீர்ப் புகைக்குண்டொன்றைத் திருடி வைத்திருந்த சந்தேகநபர் கைது
பொலிஸ் திணைக்களத்துக்குச் சொந்தமான கண்ணீர்ப் புகைக்குண்டொன்றைத் திருடி வைத்திருந்த இன்னொரு வாலிபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக திருடி, தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் நேற்று இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கடந்த ஜூலை மாதம் 13ம் திகதி நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கான வன்முறை சம்பவத்தின் போது பொலிஸ் திணைக்களத்தின் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் களவாடப்பட்டிருந்தன.
ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்தவர் கைது |
விசாரணைகள்
சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் மூலம் கடந்த நாட்களில் வாலிபர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடமிருந்த கண்ணீர்ப் புகைக்குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ராஜகிரிய, ஒபேசேகரபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
