மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த நபர் பலி: கடவத்தையில் சம்பவம்!
கடவத்தை - ராகம வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (21) இரவு நடைபெற்றுள்ளதாகக் கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவத்தை - உடகரகஹமுல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
ஹோட்டலின் மேல் மாடி அறையில் தங்கியிருந்த பிரஸ்தாப நபர், நேற்றிரவு தனியாக மது அருந்தியுள்ளார்.
விசாரணை
மதுபோதையில் காற்று வாங்குவதற்காகத் தங்கியிருந்த அறைக்குப் பின்னால் உள்ள பெல்கனிக்கு வந்த போது அவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.