பதுளையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் பதுளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை (03.09.2024) இடம்பெற்றுள்ளது.
பதுளை வெவஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
பதுளை பகுதியில் விற்பனை
குறித்த சந்தேக நபர் கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை கொண்டு வந்து பதுளை பகுதியில் விற்பனையில் ஈடுபடுவதாக பதுளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து 345 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வெதமுல்ல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர ஆகியோரின் ஆலோசனையின் பேரில் குற்ற புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பிரபோ சானக்க தலைமையில் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து,விசாரணையின் பின்னர் சந்தேக நபரை பதுளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
