இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு ஓர் அறிவிப்பு
இலங்கைக்கு செல்லும் தமது நாட்டவர்களை அதிக எச்சரிக்கையுடன் செயற்படுமாறு, அவுஸ்திரேலியா அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ளது.
இதன்படி, இலங்கைக்கான பயண ஆலோசனையை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்றும், அதிக எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ளுமாறும், அவுஸ்திரேலிய அரசாங்கம் கேட்டுள்ளது.
பயண அங்கீகாரம்
பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக இலங்கையில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இலங்கைக்குள் நுழைய, அவுஸ்திரேலியர்களுக்கு மின்னணு பயண அங்கீகாரம் வடிவில் விசா தேவைப்படும் என்றும் அந்த ஆலோசனை கூறுகிறது.
கொழும்பின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்று சேரும்போது, இந்த மின்னணு பயண அங்கீகாரத்தைப் பெறுவதற்கு குறைந்த வசதிகளே இருப்பதால், பயணம் செய்வதற்கு முன்னதாகவே அதனை செய்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
