இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டம்
நாடு முழுவதும் உள்ள நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைய, இந்த களஞ்சியசாலைகள் சுத்தம் செய்யப்படுகின்றன.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த களஞ்சியசாலைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், இதனால் நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, நெல் சந்தைப்படுத்தல் சபையின் கீழ் உள்ள 209 நெல் களஞ்சியசாலைகள் சுத்தப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
