இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் எடுக்காத முடிவை எடுத்த ஜனாதிபதி ரணில்

Nimal Siripala De Silva Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Benat Dec 06, 2022 02:03 PM GMT
Report

இலங்கையில் இதற்கு முன்னர் எந்தவொரு அரசியல்வாதியும் எடுக்காத சில தீர்மானங்களை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துணிச்சலாக எடுத்திருந்தார். உண்மையில், இந்த முடிவு மிகவும் முன்னதாகவே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, பாரம்பரிய கட்டமைப்பிற்கு வெளியே தயாரிக்கப்பட்டது.

மக்களுக்கு உடனடி குறுகியகால பலன்கள் கிடைக்கும் வகையில் சம்பள உயர்வு, வரி குறைப்பு போன்றவற்றை வழங்க வேண்டும் என்பதே வரவுசெலவுத்திட்டம் குறித்த நமது எதிர்பார்ப்பாகவும், பாரம்பரியமான சிந்தனையாகவும் காணப்படுகிறது.

இந்த நேரத்தில், கடந்த ஏழு தசாப்தங்களில் அனுபவிக்காத மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் நாம் இருக்கிறோம்.

தற்போது நாம் எதிர்கொள்ளும் இந்த பொருளாதாரச் சிக்கலில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்வதே தற்போதைய தேவையாகும். அதனால் நாம் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்க வேண்டும்.

வரவுசெலவுத் திட்டத்தின் பின்னணியில் உள்ள  நோக்கம்  

இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் எடுக்காத முடிவை எடுத்த ஜனாதிபதி ரணில் | A New Decision Taken By President Ranil

வருமானம் மற்றும் செலவுகளை எடுத்துக் கொண்டால், வரி மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து நாம் பெறும் வருமானத்தை விட நமது செலவு மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகம். ஒரு குடும்பத்தில் கூட, உங்கள் செலவு வீட்டு வருமானத்தை விட அதிகமாக இருந்தால் கடனில் மூழ்கிவிடுவீர்கள்.

எனவே, நமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் வரை வரி வருமானம் மற்றும் செலவுகளை சிறிது காலத்திற்கு மறுசீரமைக்க வேண்டும்.

கடந்த ஐந்து அல்லது ஆறு தசாப்தங்களாக அழிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதே வரவுசெலவுத் திட்டத்தின் பின்னணியில் உள்ள ஒரே நோக்கமாகும்.

புதுமையான தீர்வுகளும், அணுகுமுறைகளுமே எமக்குத் தற்பொழுது தேவையாக உள்ளன. மக்களும் இதற்குத் தயாராக இருக்க வேண்டும். வேறுவழியில் சென்றால் விரும்பியதை அடைய முடியாது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கையில் இதற்கு முன்னர் எந்தவொரு அரசியல்வாதியும் எடுக்காத சில தீர்மானங்களை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துணிச்சலாக எடுத்திருந்தார். உண்மையில், இந்த முடிவு மிகவும் முன்னதாகவே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

தற்போது 52 அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை எடுத்துக் கொண்டால், திரட்டப்பட்ட இழப்பு சுமார் 1100 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

விமானத்தில் ஏறாத ஒரு விவசாயி அல்லது தொழிலாளி இதற்குப் பணம் செலுத்துகிறார். எனவே, நாம் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டும் மற்றும் இந்த குழப்பத்தில் இருந்து நாம் வெளியேற வேண்டும். இதற்கு நாம் காட்டிய பாதையே இந்த வரவுசெலவுத்திட்டமாகும் என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US