மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவ சிப்பாய் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று(10) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மல்லாவி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவரே காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
கந்தளாய் வான்எல பகுதியைச் சேர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்குச் சென்று வீட்டிலிருந்து இராணுவ முகாமுக்குச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam