நீரில் மூழ்கி பலியான 2 பிள்ளைகளின் தாய்: மரணத்தில் சந்தேகம் வெளியிடும் பொலிஸார்
பதுளை - லுணுகல பகுதியில் நீராடச் சென்ற நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலம் கும்புக்கன் ஓயாவில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
லுனுகல, ஜனதபுர, துபாஹிட்டியவத்த பகுதியைச் சேர்ந்த வர்ணசூரிய சுமித்ரா தமயந்தி (வயது 36) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கு அருகில் உள்ள கும்புக்கன் ஓயாவில் தாய் நீராடச் சென்றதாகவும், இதன்போது அவரது 17 வயது மகளும் 12 வயது மகனும் வீட்டில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணத்தில் மர்மம்
எனினும் அவரது முகம், தலை மற்றும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பல பற்கள் உடைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பெண்ணின் கணவர் நேற்று முதல் வீட்டில் இல்லை எனவும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan