யாழில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்
யாழ்ப்பாணத்தில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்டகப்பட்டவர் அல்வாய் வடக்கு முத்துமாரியம்மன் கோயிலடியைச் சேர்ந்த இராஜசிங்கம் விக்னேஸ்வரன் என்கின்ற 32 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவரின் குடும்பத்தினர், பிறந்தநாள் நிகழ்வொன்றிற்காக வெளியிடத்திற்கு சென்றிருந்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத வேளை அங்கு உயிரிழந்தவர், தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரேத பரிசோதனைக்காகவும், மேலதிக விசாரணைக்காகவும் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri