யாழில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்
யாழ்ப்பாணத்தில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்டகப்பட்டவர் அல்வாய் வடக்கு முத்துமாரியம்மன் கோயிலடியைச் சேர்ந்த இராஜசிங்கம் விக்னேஸ்வரன் என்கின்ற 32 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவரின் குடும்பத்தினர், பிறந்தநாள் நிகழ்வொன்றிற்காக வெளியிடத்திற்கு சென்றிருந்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத வேளை அங்கு உயிரிழந்தவர், தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரேத பரிசோதனைக்காகவும், மேலதிக விசாரணைக்காகவும் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி News Lankasri
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan