பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது
குருநாகல்(Kurunagala) - நாகொல்லாகம பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(13.06.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
இலஞ்சம் வழங்க முயற்சி
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை விடுவிக்க 50,000 ரூபா, இலஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இலஞ்சம் வழங்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர் ஹிரியால, அம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் 20 மற்றும் 28 வயதுடைய, அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் சந்தேகநபர்கள் மூவரும் இன்று(14) மஹவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri