கப்பலில் இருந்து கடலில் விழுந்த பெருமளவு ஆயுதங்கள்
ஏராளமான ஆயுதங்கள் கப்பல் ஒன்றில் இருந்து கடலில் வீழ்ந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த ஒரு கப்பலில் ஆயுதங்கள் மாற்றப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினால் செங்கடலுக்குச் செல்லும் ஒரு கப்பலில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டது.
கடற்படை சேவை படகு ஒன்று ஆயுதங்களை கப்பலுக்கு நகர்த்திக் கொண்டிருந்தபோது,கடல் கொந்தளிப்பு காரணமாக ஆயுதங்கள் கடலில் வீழ்ந்தன என்று கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
36 ஆயுதங்களும் வெடிமருந்துகளும் இதன்போது கடலில் வீழ்ந்துள்ளன.
இந்தநிலையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கண்டுபிடிப்பதற்காக இலங்கை
கடற்படை தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
